tamilnadu

img

கொங்குநாட்டில் புதிய வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம், சர்க் கார் சாமக்குளம் பேரூ ராட்சி, கொண்டையம்பாளையம் ஊராட்சி, குறும்பாளையம் பஞ்சாயத் துக்குட்பட்ட காளிங்கராயன் குளக் கரை கிழக்குப் பகுதியில் அண்மை யில் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது வட்டெழுத்துக்கல் வெட்டு கண்டறியப்பட்டது. 2.5அடி நீளமுள்ள துண்டுக் கல்வெட்டில் இடம்  பெற்ற எழுத்துக்களை ஆராய்ந்தபோது 1000 ஆண்டுப் பழமைவாய்ந்த விக்கிரம சோழனாகிய கொங்குச் சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது.
கல்வெட்டு வாசகம்: 
ஸ்வஸ்திஸ்ரீ கோக்கலிமூர்க்க ஸ்ரீவி(க்கிரம வடபரி) சாரநாட்டுக் கலையம்புத்தூரி.... ஆ கைக்கொண்டு பாலமுது படிக்கும்.... ம் சந்திராதித்தவற்சேவகவும்... என்று உள்ளது.  இக்கல்வெட்டுத் துண்டு நன்கு  கட்டமைக்கப்பட்ட கட்டுமானக்கோயி லில் குமுதப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். காளிங்கராயன் குளத்தின் கிழக்குக்கரையில் இக்கோயில் முன்பு இருந்திருக்கிறது. தண்ணீர் நிரம்பி இக்குளக்கரை உடைந்தபோது மழை வெள்ளத்தில் அக்கட்டுமானக்கோயில் சிதிலமடைந்ததுபோக இத்துண்டுக் கல்வெட்டு மட்டுமே நமக்குக் கிடைத் திருக்கிறது.
வரலாற்றுச்செய்தி: 
கௌசிகா நதிக்கரையில் உள்ள இவ்வூர் கௌசிகா நதிப்பண்பாட்டை வெளிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாம்பல் மேட்டுப்பகுதியில் பல தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக் கப்பட்டன. இவ்வூரின் வரலாற்றுப்  பெருமையைப் பேசும் கோட்டை மேட்டுப் பகுதியிலும் மேற்பரப்பாய்வுப் பணியைச் செய்து பண்டைய வரலாற் றுச் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங் களை முன்பு கண்டறிந்துள்ளோம். இதன் மூலம் இரும்புக்காலம் மற்றும் மட்கலப்பண்பாட்டுக்கால மக்கள் நெசவு மற்றும் கல்மணித் தொழிலில் மேம்பட்டு இருந்ததை ஆய்வு செய்து உறுதி செய்திருக்கிறோம்.  கல்வெட்டு குறிப்பிடும் கவையம் புத்தூர் 2000 ஆண்டுப் பழமை உடைய ஊர் என்பதைக் கடந்த நான்கைந்து ஆண்டு கால ஆய்விலே வெளிப்படுத்தப் பட்டுள்ளது.  காளிங்கராயன் குளம் 150 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இக்குளப்பகுதி நீர்மேலாண்மையின் சிறப்பை எடுத் துக்காட்டுவதாக இருக்கிறது. வரலாற் றுக்காலத்திலும், இடைக்காலத்திலும் இப்பகுதியில் உள்ள குளங்களுக்கு வற்றாத ஜீவநதியாக ஓடிய கௌசிகா நதி இப்பகுதி வேளாண் விவசாயத்திற்கு வித்திட்டது எனலாம்.
நாட்டுப்பெருமை :
இவ்வூர் இடைக்காலத்தில் வடபரி சாரநாட்டுப்பகுதியில் இருந்ததை இக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மூன்று பெரும்பகுதியாக இக்காலத் தில் கொங்குநாடு பிரிக்கப்பட்டிருந்தது.
1.    வடகொங்கு 
2.    தென்கொங்கு 
3.    வீரசோழ வளநாடு 
வடகொங்குப்பகுதி இடைக்காலத் தில் 20 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந் தது. நாடு என்பது விவசாயப் பகுதி யைக் குறிப்பதாகும். அதில் ஒன்றுதான் வடபரிசாரநாடு கொங்குநாட்டுப்பிரிவு களில் இதுவே மிகப்பெரியதாக இருந் தபகுதி. ‘வடபரிசாரநாடு’ நொய்யல் ஆற்றின் வடக்கே இருப்பதால் இப்பெயர் திசையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகக் காணலாம்.  ‘வடபரிசாரநாடு’ என்ற பெயரைக் கூறும் முதல் கல்வெட்டு என்ற பெருமை யையும் இக்கல்வெட்டு பெறுகிறது. கொங்குநாட்டில் உள்நாட்டுப்பிரிவு கள் கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் தான் உருவாகியிருக்கிறது. இதற்கு முன் உள்நாட்டுப்பிரிவுகள் இல்லை.
கொங்குச்சோழர் ஆட்சி : 
கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.14ஆம் நூற்றாண்டு வரை கொங் குப்பகுதியில் கொங்குச் சோழர் ஆட்சி  குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சிறப்புடை யதாகத் திகழ்ந்தது. இக்காலத்தில் கொங்குச் சோழர்கள் நிலையான ஆட்சி யைக் கொடுத்தனர். கி.பி.942 முதல் கி.பி.1305 வரை 350 ஆண்டுகால ஆட்சி கொங்குச் சோழர்களது ஆட்சி யாகத் திகழ்ந்தது. சோழன் என்ற அடை மொழியுடன் இவர்கள் இப்பகுதியில் ஆட்சி செய்தனர். அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் கணிசமான பங்களிப்புக்குக் காரணமானவர்களாக இவர்கள் விளங்கினர். போராட்டம், படையெடுப்பு, வெற்றி, தோல்வி நிறைந்ததாகவும் அரசியல் வாழ்க்கை நிலையற்றதாகவும் இப்பகுதி இருந்தது.  இவ்வாறு காலிங்கராயன் குளக்கல் வெட்டு கி.பி.11ஆம் நுற்றாண்டின் தொடக்க காலத்தில் வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகும். வடபரிசாரநாட்டில் கிடைக்கப்பெற்ற வட்டெழுத்தில் இறு திக்காலக் கல்வெட்டாக இக்கல்வெட் டைக் கருதலாம். இதற்குப்பிறகு இப் பகுதியில் வட்டெழுத்து வழக்கில் இல்லை எனக்கருத முடிகிறது.  வட கொங்கு நாட்டின் உட்பிரிவுகள் உள்ள 20 நாடுகளில் வட பரிசார  நாடும் ஒன்று. இதனை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் வடபரிசாரநாடு பெரிய நிலப்பரப்பைக் கொண்டதோடு நொய்யலின் வடக்கில் அமைந்த பகுதி என்ற அளவில் திசைப்பெயராக அமைகிறது.  இப்போது வழக்கில் உள்ள கோவில் பாளையம் என்ற ஊர் இக்கல்வெட்டில் கவையன் புத்தூராக குறிக்கப்பெறுகி றது. இடைக்காலக் கல்வெட்டுகளிலும் இப்பெயரே காணப்படுகிறது. கோக்கலிமூர்க்க விக்கிரமச்சோழன் வடபரிசார நாட்டை கி.பி.11ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்தி ருப்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்து கிறது. அத்துடன் இம்மன்னனின் தந்தை  வீரசோழக்கலிமூர்க்கனாகவும் இவரது பாட்டனார் கொங்குச்சோழர் ஆட்சியை  உருவாக்கிய முதலாவது வீரசோழனா கவும் பார்க்கமுடிகிறது.  இறைக்கொடையைப் பற்றிக் கூறும் இக்கல்வெட்டு ‘ஆ’ க்களைக் கொடை யாகப் பெற்று அதன்வழி பெறும் பால முது படையலைப்பற்றிப் பேசியிருக்கி றது.  கொங்குச்சோழர்கள் இருக்கு வேளிர்  வழி வந்தவர்கள் என்பதும் வடகொங் கில் அமைந்த வடபரிசார நாட்டை ஆண்டவர்கள் என்பதும் பெறப்படுகி றது.  மங்களம் உண்டாகுக என்ற பொரு ளில் ஸ்வஸ்திஸ்ரீ என்று இக்கல்வெட் டுத் தொடங்கி சந்திரன் சூரியன் இருக் கும்வரை இறைக்கொடையைப் பின்பற் றுவதற்குச் சந்திராதித்தவற்சேவகவும் என்று கல்வெட்டு முடியும் பகுதியாகக் கிடைக்கப்பெற்றது, என்றாலும் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மற்றொரு துண்டுக்கல்வெட்டும் கிடைக்கப்பெற் றால் மேலும் முழுமையான வரலாற்றை (ஆட்சி ஆண்டு, இறைதெய்வம்) அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருந்தி ருக்கும். இவ்வாறு இரண்டரை அடி  நீளமுடைய குமுதம் என்று சொல்லக் கூடிய உடைந்த கல்தூணில், நான்கு  வரிகளில் வட்டெழுத்தில் எழுதப்பட் டுள்ளதைக் கண்டறிய முடிந்தது. இதன் தொடர்ச்சிப்பகுதி நமக்குக்கிடைக் கவில்லை. அதனைத் தேடும்பணியில் இக்குழு ஈடுபட்டு வருகிறது. கோவை பி.எஸ்.ஜி பேராசிரியர் டாக்டர் இரவி அவ்வெட்டெழுத்துக் கல்வெட்டைப் படித்து ஆராய்ந்து பல வரலாற்று தகவல்களை வெளியிட்டுள்ளார்.