தருமபுரி, நவ. 4- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டகுழு உறுப்பின ரும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவருமான தோழர் எம்.ராஜேந்திரன் திங்களன்று காலமானார். தருமபுரி வட்டம், தடங் கம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் எம்.ராஜேந்தி ரன் (57) அரசு போக்குவ ரத்து கழகத்தின் தருமபுரி நகர் பணிமனையில் தொழில்நுட்ப தொழிலாளி யாக பணியாற்றி வந்தார். இப்பணியின்போது சிஐடியு சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்க பணியில் ஈடுபட்டு முன்னணி நிர்வாகி யாக செயல்பட்டார். இதன்பின் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கட்சியின் தருமபுரி வட்ட செயலாளரா கவும், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாள ராகவும் திறம்பட செயலாற் றியவர். தற்போது மார்க் சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழு உறுப்பின ராகவும், சிஐடியு மாவட்ட துணை தலைவராகவும், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து பணி யாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எம்.ராஜேந்திரன் திங்க ளன்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்ட குழு, சிஐடியு மாவட் டக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள் ளது. மறைந்த தோழர் எம்.ராஜேந்திரனின் இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று மதியம் அவ ரது சொந்த ஊரான தருமபுரி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் நடைபெறுகிறது.