tamilnadu

தருமபுரி: வாகன சோதனையில் 415 பேர் மீது வழக்கு

தருமபுரி, ஜூலை 11- தருமபுரியில் வாகன சோதனையில் விதிகளை மீறிய 415 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களக மாவட் டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியா மலும், வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமலும் மற்றும் இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக, கடந்த இரு மாதங்கள் வாகன சோத னையில் ஈடுபட்டதில் தருமபுரியில் 173 வழக்கும், அரூரில் 73 வழக்கும், பென்னாகரத்தில் 96 வழக்கும்,  பாலக்கோட்டில் 73 வழக்கும் பதிவாகியுள்ளன. தருமபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் அணி யாததால் 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.