tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

கடத்தூர், ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களில்  கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துக

தருமபுரி, டிச.6- தருமபுரி மாவட்டத்தில் புதிய தாக அறிவிக்கப்பட்டுள்ள கடத்தூர்,  ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதி களை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி மாவட்டத்தில் அரூர்,  தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னா கரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப் பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங் களில் மொத்தம் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சி களும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சி களும் உள்ளன. மொரப்பூர் மற்றும்  பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங் களில் நிலப்பரப்பு, கிராமப்பகுதி கள் அதிகமாக உள்ளன. இதனால்  ஊராட்சி ஒன்றிய அலுவலங் களுக்கு வருகின்றவர்கள் தொலை தூர தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அரசு நலத்  திட்டங்களை பொதுமக்கள் எளிதில்  பெறமுடியாமல் சிரமமடைந்து வரு கின்றனர்.   எனவே, மொரப்பூர் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங் களைப் பிரிக்க வேண்டுமென அப் பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், பென்னாகரத்தை இரண் டாக பிரித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் என புதியதாக தொடங்கப் படும் என 2013ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  புதியதாக உருவாக்கப்படும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25  கிராம ஊராட்சிகளும், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிராம  ஊராட்சிகளும் இடம் பெற்றுள் ளன.  கடத்தூர் ஊராட்சி ஒன்றியத் தில் இடம் பெற்றுள்ள கிராம ஊராட்சிகள் : மணியம்பாடி, ஒச ஹள்ளி, சிந்தல்பாடி, நல்லகுட்ல ஹள்ளி, ஒபிலிநாய்க்கனஹள்ளி, புளியம்பட்டி, சில்லாரஹள்ளி, சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, மோட்டாங்குறிச்சி, புட்டிரெட்டிப் பட்டி, மடதஹள்ளி, லிங்கநாய்க் கனஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, தாளநத்தம், தாதனூர், பசுவாபுரம்,  குருபரஹள்ளி, வகுத்தப்பட்டி, சந்தப்பட்டி, கர்த்தானூர், ராமியன ஹள்ளி, தென்கரைக்கோட்டை, கோபிச்செட்டிப்பாளையம், கேத்து ரெட்டிப்பட்டி. ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில்  இடம் பெற்றுள்ள கிராம  ஊராட்சிகள்: அஜ்ஜனஹள்ளி, கோடிஹள்ளி, தொன்னகுட்ட ஹள்ளி, மஞ்சாரஹள்ளி, நாகமரை,  பெரும்பாலை, ராமகொண்ட ஹள்ளி, பத்ரஹள்ளி, சுஞ்சல்நத்தம், ஜென்டனஹள்ளி. இந்நிலையில், தருமபுரி மாவட் டத்தில் புதியதாக உருவாக்கப்படும் கடத்தூர் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலக செயல் பாடுகள் 2013-க்கு பிறகு நடத்தப் படும் உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் தலைமையில் செயல்பாட்டுக்கு வரும் என  அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2013-க்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த உள்ள சூழ்நிலையில்  கடத்தூர் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கான அலுவ லகக் கட்டட வசதிகள் இதுநாள்  வரையிலும் தொடங்கப்பட வில்லை. சமுதாயக் கூடங்களில் தற்காலிக அலுவலகம் அமைத்து  உள்ளாட்சித் தேர்தல் பணிகள்  நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. புதியதாக உருவாக்கப்படும் ஊராட்சி ஒன்றியங்களில் பணி புரிவதற்கான வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவி யாளர்கள், இரவு காவலர்கள் உள் ளிட்டோருக்கான பணியிடங்களை அரசு சார்பில் இன்னும் உருவாக் கப்படவில்லை என கூறப்படு கிறது. எனவே, கடத்தூர் மற்றும் ஏரியூர்  ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேவை யான அலுவலக கட்டட வசதிகள்,  அரசு அதிகாரிகள், பணியாளர் களை நியமிக்குமாறு தமிழக அரசை  பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.

காவலன் செயலி அறிமுகம்  பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 

தருமபுரி, டிச.6- பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்புக்காக காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பாளா் ப.ராஜன்  வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு, காவல் துறையின் சார்பில்  பெண்கள், மூத்த குடிமக்கள்,  சிறார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக காவலன் செயலி  அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல் பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெண்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்கும்,  பணிபுரியும் இடம் மற்றும் வசிப்பிடங்களுக்கு காவல் அலுவலா்கள் சென்று செயலி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். அவசர உதவிக்கு, செயலியில்  உள்ள எஸ்.ஓ.எஸ். என்கிற பொத்தானை ஒரு  தடவை தொட்டாலே போதும், அழைப்பவரின் இருப்பிடம்  உடனே ஜிபிஎஸ் மூலம் அறியப்படுவதோடு, அழைப்ப வரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம் அவா் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண் களுக்கு தானாகவே பகிரப்படும்.  காவலன் செயலி பொத்தானை தொட்டாலே போதும்  உடனடியாக ஜிபிஎஸ் இயங்க ஆரம்பித்து செல்லிடப்பேசி கேமரா தானாகவே 15 வினாடிகள் ஒலி, ஒளிவுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவிடும். இணைய இணைப்பு இல்லாத இடங் களிலும் தானியங்கி குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் செயல்படும். அதிர்வு தூண்டல் வசதியின் மூலமும் தொடா்பு  கொள்ளலாம். மேலும், இச்செயலியில் ஆங்கிலம் மற்றும்  தமிழ் என இரு மொழி வசதிகள் உள்ளது. எனவே, பொது மக்கள் காவலன் செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அவசர காலத்திலும், அசம்பாவிதம் ஏற்படக்கூடிய சமயங்களிலும் இந்த செயலியை பயன் படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.