tamilnadu

img

கஞ்சமலை சித்தர் கோவிலில் வரும் நீரோடையில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் தவிப்பு

சேலம், செப். 23- இளம்பிள்ளை அருகே கஞ்ச மலை சித்தர் கோவிலில் வரும் நீரோடையில் தண்ணீர் இல்லாத தால் பக்தர்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ் வொரு அமாவாசை, பவுர்ணமி அன்று சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராள மான  பொதுமக்கள் வந்து செல் கின்றனர். அதுமட்டுமல்லாமல் சித்திரை மாதத்தில் கோவிலில் சித்திரைச் சிறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெறும். மேலும்,  கஞ்சமலையை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் தங்களது விளை  நிலங்களில் விளைந்த விளை பொருட்களை கொண்டு சமையல் செய்து,  படையலிட்டு  வழிபட்டு செல்வார்கள்.  இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குளிக்க  வசதி யாக கோவில் வளாகத்தில் 9 கிண றுகள்,  ஒரு குளம் அமைக்கப்பட்டு உள்ளது. மூலிகை நிறைந்த கஞ்சமலை யில் ஊற்று கிணற்றில் உள்ள நீர் மூலிகை நீர் என்பதால் குளித்து விட்டு தண்ணீரை பருகி செல் வார்கள். ஆனால், தற்சமயம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து பல்வேறு ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கஞ்சமலையில் இவ்வளவு மழை பெய்தும் சித்தர் கோவிலுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை  என்பதால் அங்கு வரும் பக்தர்க ளும், விவசாயிகளும் பெரும்  ஏமாற்றமடைந்துள்ளனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கஞ்சமலையில் வரும் நீரோடையை வனத்துறை யினர்  5 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு கட்டி தண்ணீரை வேறு பகுதிக்கு திருப்புகின்றனர். இதனால் சித்தர் கோவிலில் உள்ள எந்த குளத்திலும் தண்ணீர் வரவில்லை. கடையாம்பட்டி, இலகுவம்பட்டி பகுதியுள்ள ஏரி கள் மற்றும் குளங்கள், விவசாய நிலத்திற்கு பல வருடங்களாக  ஓடையில் நீர் வரவில்லை. இத னால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என  குற்றம்சாட்டினர். அதேநேரம், கோவில் நிர்வா கத்தின் சார்பில் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 4 இடங்க ளில் ஆழ்துளை கிணறு அமைத்து,  அதன் மூலம் தண்ணீர் விநியோ கம் செய்து வருகின்றனர். ஆனால் அது அங்கு வரும் பக்தர்களுக்கு போதியதாக இல்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரும், இந்து அறநிலையத் துறையின ரும் தலையிட்டு கஞ்சமலை  நீரோடையினை சீரமைத்து   மழைநீர்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பத்தர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.