கோவை, ஜூன் 17– துப்புரவு பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் மனு அளித் தனர். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமையில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, தினக்கூலி பணியாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இது வரை நிர்ணயிக்கப்படவில்லை. ஆகவே, உடனடியாக ஊதியக்குழு கூட்டத்தைக் கூட்டி ஊதிய உயர்வை நிர்ணயிக்க வேண்டும். அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்த ரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு அரசாணை 348ன்படி பணிக் கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்க ளுக்குப் பணிக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.