tamilnadu

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிப்பிரிவு

அவினாசி, ஆக. 3 - ஆணவப் படுகொலைகளைத் தடுக்க திருப்பூர் மாவட்ட காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் நடுரோட்டில் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார். இதே போல், கோவை மேட்டுப்பாளையத்தில் கனகராஜ்- வர்ஷினி பிரியா ஆணவப் படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கவுரவப் படுகொலைகள் அதிர்ச்சியளிக்கும் நிலையில், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. இதனையடுத்து காவல் துறை ஆவண கொலையை தடுக்க தனிப்பிரிவுகளை அமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்  மாவட்டத்தில் நடைபெறும் ஆணவ கொலைகள் மற்றும் ஆணவ கொலைக்கான அச்சுறுத்தல் கள் பற்றி விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்த ரவுப்படி தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக் கள் அனைவரும் ஆணவ கொலைகள் மற்றும் அச்சுறுத் தல்கள் இருப்பின் 0421-2770044, 94981 01320 என்ற எண்களில் தொடர்பு கொண்டு திருப்பூர் மாவட்ட காவல் தனிப்பிரிவில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 94981 81208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவிநாசி பகுதி யில் காவல் துறையின் சார்பில் விளம்பர தட்டிகள் வைக்கப் பட்டுள்ளது.