கோவை, ஜூலை. 16 – கார்ப்ரேட்டுகள் கொள்ளையடிக்க பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை சீரழிக்கும் மத்திய மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்து சிஐ டியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பயணிகள் ரயில்கள் ரத்து, வழித் தடங்கள் மற்றும் பராமரிப்பு பணி கள் தனியாரிடம் ஒப்படைப்பு என இந்திய ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் முயற்சியை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு கார்ப்ரேட்டுக ளின் நலனுக்காக ரயில்வேதுறையை சீரழித்து, லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை கேள் விக்குள்ளாக்கும் மோடி அரசை கண் டித்து நாடு முழுவதும் கண்டன இயக் கத்தை நடத்த சிஐடியு மத்தியக்குழு அறைகூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு சிஐடியுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள் ளிட்ட பலர் பங்கேற்று பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பூர்
திருப்பூர் ரயில் நிலையம், ஊத்துக் குளி, அவிநாசி, உடுமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு மாநில உதவித் தலைவர் எம்.சந் திரன், மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், விசைத்தறித் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.முத்துசாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
சேலம்
சேலம் டவுன் ரயில் நிலையம், ஜங்சன் கூட்செட், ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடக்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட துணைச்செயலாளர் செ.கருப் பண்ணன், மாவட்ட துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், போக்குவ ரத்து சங்க துணைப் பொதுச்செய லாளர் டி.செந்தில்குமார், சாலை போக்குவரத்து மாவட்ட பொருளா ளர் வேலுமணி, போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச்செய லாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டிஆர் இயு மாவட்ட நிர்வாகி திருப்பதி, இராம கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரியில் ரயில்நிலையம், பொம்மிடி, மொரப்பூர், பாலக்கோடு, மாரண்ட அள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட தலைவர் பி.ஜீவா, மாவட்ட இணைச் செயலாளர் டி.லெனின் மகேந்திரன், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செய லாளர் சி.ரகுபதி, மாநிலகுழு உறுப்பி னர் சி.கலாவதி, மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செய லாளர் ஆர்.ரமேஷ், டிஆர்இயூ மாவட்ட செயலாளர் முகமது ரபிக், நிர்வாகி செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கொட்டும் மழையை யும் பொருட்படுத்தாமல் கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.