திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பகுதியில் சாக்கடை வசதி செய்து தரக்கோரி கொசுவலை போர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி ஜெ .ஜெ . நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் தார் சாலைகள் மோசமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி, அவர்களுக்கு காயங்கள் ஏற்படுகிறது. அதேபோல் சாக்கடை பல மாதங்களாக தூர் வாராத தால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை வீரபாண்டி பேருந்து நிறுத்தம் முன்பாக கொசு வலைகளை தங்கள் மீது போர்த்தியும், தலை மற்றும் கை களில் காயம்பட்டது போல் கட்டு கட்டிக் கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ரவி பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி உரை யாற்றினார்.