tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிடக்கோரி தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.27- மோட்டார் தொழிலை சீரழிக்கும் மத்திய  அரசை கண்டித்து மோட்டார் தொழிலா ளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு  செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் சி.முரளி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்செயலாளர் சி. நாகராசன், சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ரகுபதி, மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கோரிக்கையை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அநியாயமாக உயர்த்தியுள்ள புதுப்பித்தல் பதிவு மற்றும்  எப்சி கட்டணங்களை திரும்பப்பெற வேண்டும். மக்களுக்கான பொது போக்கு வரத்தை சீரழிக்கக்கூடாது. அனைத்து  வகை ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை பாதிக்கும் வகையிலான  மோட்டார் வாகன சட்டத்திருத்ததை கைவிடவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.