நாமக்கல், செப்.8- புதிய கல்விக் கொள்கை-2019 வரைவை ரத்து செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங் கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்புரையாற் றினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கை-2019 வரைவை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 145 ஐ திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நாமக்கல், எருமப்பட்டி, ராசிபுரம், திருச் செங்கோடு, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் குப்புசாமி, அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் இளங் கோவன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொருளாளர் பாலமுரளி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் வேலுசாமி மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். நிறைவாக ஒருங்கிணைப் பாளர் பெரியசாமி நன்றி கூறினார்.