சீர்காழி, நவ.12- சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தில் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக் கட்டடம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் ஊராட்சியில் தில்லைவிடங்கன் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்த பயனும் இன்றி இடிந்து விழும் நிலையில் இருந்தது. அப்பகுதியில் உள்ள குடியிருப்போர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது குறித்து கிராமப் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் உத்தரவின் பேரில் கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன் பி.டி.ஓ ஜான்சன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் பழமையான நீர்த்தேக்கத் தொட்டியினை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இக்கட்டி டம் உரிய நேரத்தில் இடிக்கப்பட்டு அகற்றப் பட்டதால் கிராமமக்கள் அச்சத்திலிருந்து மீண்டனர்.