tamilnadu

img

நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் தாமதம்

உடுமலை கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி 
 

சாகுபடிக்கு தயாராக இருந்த விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை, செப். 26- உடுமலை கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளதால் நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர்  திறப்பதில் தாமதம் என்கிற நிலை யில் சாகுபடிக்கு தயாராக இருந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள் ளனர். உடுமலை திருமூர்த்தி அணை யிலிருந்து பிஏபி நான்காம் மண் டல பாசனத்திற்கு கடந்த புத னன்று (செப்.25) பிரதான கால்வா யில்தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடுமலை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில், உடு மலை கால்வாயின் குறுக்கே  பெரியகோட்டை ஊராட்சிக்குட் பட்ட யுகேபி நகர்,சுந்தரர் நகருக்கு செல்லும் சாலையில் இரண்டு பாலங்கள் இருந்தன. இவ்வி ரண்டு பாலங்களையும் தலா ரூ 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டும் பணி தற்போது துவங்கியுள்ளது.  இந்த பால கட்டுமான பணிகள் காரணமாக தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  முன்னதாக, மூன்றாம் மண்டல பாசனம் முடிந்து கால்வாயில் கடந்த 4 மாதங்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த சமயத் தில் பாலம் கட்டுமான பணியை மேற்கொள்ளாமல், நான்காம் மண்டல பாசனத்திற்கு திரு மூர்த்தி அணையிலிருந்து தண் ணீர் திறக்கப்பட்ட நிலையில் பாலம் கட்ட கால்வாயை தோண் டும் பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக, பாலம் கட்டுமான பணிக்காக கால்வாயில் மண் கொட்டியும், கால்வாயின் வடிவ மைப்பை மாற்றியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத னால் தண்ணீரை எதிர்பார்த்து, உழவு பணிகளை முடித்து தயா ராக இருந்த விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர். இதுகுறித்து பாசன விவசாயி கள் கூறுகையில், திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டநிலையில், பொதுப் பணித்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியம் கார ணமாக உடுமலை கால்வாயில் தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நான்காம் மண் டல பாசனத்திற்கு வழக்கமாக ஆகஸ்டு 15ல் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு 40 நாட்கள் காலதாமதமாக நான் காம் மண்டல பாசனத்திற்கு  தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நி லையில் உடுமலை கால்வாயில் பாலம் கட்டுமான பணிகள் நடை பெறுவதால்  பாசன விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஆகவே,  பாலப்பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறந்து விடவும், கால்வாய் வடிவ மைப்பை மாற்றாமலும்  பாலம் கட்டவும் அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கவும் வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். - (ந.நி)