tamilnadu

img

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலிபணியிடத்தால் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் தாமதம்

தருமபுரி, ஜூலை 1- தருமபுரி வட்டார போக்குவ ரத்து அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்ட பழ குநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் நான்கு அல்லது ஐந்து நாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 60 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுவதால் தொலைதூரத்தில் இருந்து பழகு நர் உரிம் பெற வருபவர்கள் திரும் பிப்போக வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. பாலக்கோட்டில் உள்ள இணை அலுவலகத்தில் நாளொன்றுக்கு 120 பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதே போல்  அரூர் இணை அலுவலகத் தில் நாளொன்றுக்கு 40 பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் மாவட்டத் தலைநகரில் உள்ள வட்டாரப் போக்குவ ரத்து அலுவலகத்தில்  அதிக எண்ணிக்கையில் பழகுநர் உரி மம் கேட்டு விண்ணப்பிக்கப்படு கிறது. ஆனால் குறைவான எண் ணிக்கையிலே வழங்கப்படுகிறது. இதனால் உரிமம் பெற வரும் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். இத னால் தேவையற்ற அலைச்சலும், கால தாமதமும் ஏற்படுகிறது.  அதுமட்டும் அல்லாமல் அலு வலகத்தில் நேரடியாக உரிமம் கேட்டு விண்ணப்பிக்க வருபவர் களிடம் விண்ணப்பத்தை வாங்கு வதில்லை. ஆன்லைனில் விண் ணப்பிக்கச் சொல்லி தனியார் இணையதள மையங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். அங்கு தேவையற்ற சேவைக்கட்டணம் உள்ளிட்ட கூடுதல் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு புதிய மோட்டார் வாகனப்பதிவு, பழகுநர் உரிமம் பெறுதல்,ஓட்டுநர் உரிமம் பெறுதல், பொதுப்பணி வில்லை பெறுதல்,மோட்டார் வாகன தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் புதுப் பிப்பு  மற்றும் மோட்டார் வாகன  ஆய்வு அபராதம் ஆகியவற்றுக் காக ஆன்லைனில்  பணம் செலுத்த தனியார் இணையதள மையங்க ளுக்கு அனுப்பப்படுவதால் தேவையற்ற அலைச்சல் மற்றும் பணவிரயம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, உரிமம் கேட்டு விண் ணப்பிக்க வரும் அனைவருக்கும் அதேநாளில் விண்ணப்பம் பெற் றுக்கொண்டு துரிதமாக உரிமம் வழங்கவேண்டும். ஆன்லைனில் செலுத்தப்படும் அனைத்து வகை யான கட்டணங்களையும் வட் டாரப் போக்குவரத்து அலுவல கத்திலேயே வசூலிக்கவேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் உள்ள காலிப்பணியிடங் களில் அலுவலர்களை பணி யமர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், வட்டாரப்  போக்குவரத்து அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப டாமல் உள்ளதால் இத்தகைய காலதாமதங்களுக்குக் காரண மாகக் கூறப்படுகிறது. வட்டா ரப்போக்குவரத்து அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் சேர்த்து பொறுப்பேற்று பணி யாற்றுவதால் இதுபோன்ற கால  தாமதம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் உரிமம் உள்ளிட்ட சான்று பெற தயாராக உள்ள நிலையில் தேவையான ஊழியர்களை நியமித்து விதி மீறல் உள்ளிட்டவற்றை களைய அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா! ஜி.லெனின்