tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா

குன்னூர், ஆக. 28- ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கப்படா ததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற் றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். இதன்ஒருபகுதியாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதனன்று குன்னூரில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் வி.பி.தெருவில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ். கென்னடி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பத்ரி போராட்டத்தை துவக்கி வைத்து  பேசினார். சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் ஜே.ஆல்தொரை , அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஆர்.இளங்கோ வன் , ஓய்வூதியர் சங்கத்தின் பொ.ராமன் குட்டி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.ஜேக்கப் மோரிஸ், மாவட்டத் தலைவர் எல்.கிறிஸ்டோபர் உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.