போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக
திருப்பூர், பிப். 10 – வெள்ளகோவில் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் உருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளி யேறும் நச்சுப் புகை காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதால், இதைத் தடுக்க போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் அருகே கணபதிபாளையம் மணி குறிஞ்சி பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளகோவில் நகராட்சி 13ஆவது வார்டு காளிமூப்பன் பதியில் தார் உருக்கி ஜல்லியுடன் கலக்கும் புதிய தொழிற் சாலை செயல்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் நச் சுத்தன்மை கொண்ட ரசாயன புகை காற்றுடன் கலந்து நீர் நிலைகள், பொது மக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் சுகா தார பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
எனவே பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் கால் நடைகள் ஆகியவற்றின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கருதி தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் போர்க்கால அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர். அதேபோல் தலித் விடுதலை இயக்கத்தினர் அளித்த மனுவில், காங்கேயம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சாக்கடை நீர் தேங்கியுள்ள இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து செல்கிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நகராட்சியில் 19 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இன்றி குழாய் ஆய்வாளராக வேலை செய்யும் உள்ளூர் நபர் தமிழ்செல்வன் என்பவருக்கு பதிலாக வேறு நபரை நிய மனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள் ளனர்.