சேலம் மாவட்ட மக்களின் பெருமை மிகுந்த தொழில்களில் விசைத்தறி தொழிலும் ஒன்று. சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில் பெரும் பாலும் விசைத்தறி தொழிலில் ஆயி ரக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஏழைகளின் பட்டு என அழைக்கப் படும் இளம்பிள்ளை பட்டுப் புட வைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெய்யப்படும் துண்டு கள், லுங்கிகள் உள்ளிட்டவைகள் பெருமளவில் சேலம் மாவட்டத் தில் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இளம்பிள்ளை சுற்றியுள்ள இடங்க ணசாலை, கேகேநகர், வேம்படி தாளம், ஜலகண்டாபுரம், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி உற்பத்தி ஏழைகளின் குடிசைத் தொழிலாக உள்ளது. இங்கு ஒவ்வொரு பண்டி கைகளுக்கு ஏற்றவகையில் பல விதமான புடவைகள் உற்பத்தி நடை பெற்று வருகிறது. இங்கு தயாரிக் கப்படும் எம்போஸ் சேலைகள், காட் டன் சேலைகள் உள்ளிட்ட ரகங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக் கும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியா ளர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட விசைத்தறிகளும் சுற்று வட் டார பகுதியில் உள்ளது. இதனை நம்பி பல லட்சம் விசைத்தறி தொழி லாளர்கள் தங்கள் வாழ்வாதாரமாக ஏற்று பணி செய்து வருகின்றனர்.
இச்சூழலில் நாட்டையே உலுக் கிய கொரோனா வைரஸின் பாதிப் பின் காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவால் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டது. இதனால் பல லட்சம் விசைத்தறி தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. தரத்திற்கு ஏற்ப 350 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட புடவை கள் இன்று முழுமையாக தேக்கம் அடைந்துள்ளது. இதனால் புதிதாக உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் முன்வரவில்லை. தேங்கிய சரக்கு களை மட்டும் விற்கும் நிலையிலேயே உற்பத்தியாளர்களின் நிலை உள்ளது.
சிறு, குறு உற்பத்தியாளர்கள் பாதிப்பு
விசைத்தறியில் நெய்யப்படும் ஆடைகளை பெரிய அளவில் சேலம் மாவட்டத்தில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் வேலை ஆட் களை கொண்டு உற்பத்தி செய்து வந்தனர். ஒரு உற்பத்தியாளருக்கு குறைந்தபட்சம் 300 தொழிலாளர்கள் ஆடைகளை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர். ஆனால் இன்று எந்தப் பணியும் நடக்கவில்லை. பெரிய நிறுவனங்களுக்கு மற்றும் பெரிய நகரங்களுக்கு உற்பத்தி செய்த ஆடைகளை அனுப்ப முடியாமலும் விற்ற ஆடைகளுக்கு பெரிய நிறு வனங்கள் இன்றுவரை பணம் வழங்காமல் இருப்பதன் விளைவால் சிறு,குறு உற்பத்தியாளர்களை நம்பியிருந்த விசைத்தறி தொழி லாளர்கள் வேலை இழந்து அவர் களின் வாழ்வாதாரம் கேள்விக்கு றியாகவே மாறிவிட்டது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கு
சேலம் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி இருந்தாலும் ஜரிகை வேலைப்பாடுகள் உள்ளிட்ட பணிகளை புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பெரிய அளவில் செய்து வந்தனர். அவர்களுக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் சூரத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இதுவரை வந்துகொண்டிருந்தது. ஊரடங்கு காரணமாக சூரத் பகு தியில் இருந்து வரவேண்டிய மூலப் பொருட்கள் வராததால் மிகவும் முக்கிய பணியாக இருந்த ஜரிகை தொழில் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. ஒரு சேலையை உரு வாக்க பலரது உழைப்பு இருக்க வேண்டும் அதிலும் ஜரிகை வேலைப் பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய காலகட்டத் தில் புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் ஜரிகைத் தொழிலும் முழு மையாக நடைபெறாததால் விசைத் தறி தொழிலாளர்களின் ஒட்டு மொத்த பணியிலும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது.
பெருமுதலாளிகளின் சூழ்ச்சி
விசைத்தறி ஆடைகளை விற் பனை செய்ய பெருமுதலாளிகள் பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு உண் டான பாதிப்புகளை போக்க தொழி லில் சில சூழ்ச்சியான முடிவுகளை எடுத்து வரும் போக்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் முக்கியமாக சிறு,குறு உற்பத்தி யாளர்களிடம் விற்பனை செய்ய முடியாமல் உள்ள ஆடைகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வரு கின்றனர். 600 ரூபாய் மதிப்புள்ள ஆடையை 300 ரூபாய்க்கு வாங்கு வதால் சிறு,குறு உற்பத்தியாளர் களிடம் உள்ள தேங்கிய ஆடைகள் அனைத்தையும் வேறுவழியின்றி பெருமுதலாளிகளுக்கு பாதி விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் விளைவால் சிறு முதலாளிக ளிடம் உள்ள விசைத்தறி தொழிலா ளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு களும், கூலியும் தர முடியாத சூழ லுக்கு சிறு முதலாளிகள் தள்ளப் பட்டுள்ளனர்.
புலம் பெயர்ந்த விசைத்தறி தொழிலாளர்களின் நிலை
புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் விசைத்தறி தொழி லில் மிகவும் முக்கிய பங்காற்றி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக உண்ண உணவின்றி பெரிய அள வில் வாழ்வாதாரம் இழந்து இருந்த னர். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வருமானம் இல்லாமல் சேலம் மாவட் டத்தில் அவர்களால் இருக்க முடியவில்லை. அரசின் நிவாரண மும் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. தங்களின் சொந்த ஊருக்கு செல்லக்கூட அரசு எந்த வசதியும் செய்ய முடியாத நிலையில், வேறு வழியின்றி தங்களிடமிருந்த தொகையை வைத்து தனியாக பேருந்து பிடித்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் அவலமும் சேலம் மாவட்டத்தில் அரங்கேறியது. குறிப் பாக ஒரு பேருந்தில் 30 தொழி லாளர்கள் செல்ல அரசு கூறியிருந் தது. ஒரு தொழிலாளிக்கு 7,500 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டது. அரசின் முழுமை யான செயல்பாடு இன்மையின் காரணமாக இந்த நிகழ்வு இடம் பெயர்ந்த வடமாநில தொழிலா ளர்களிடையே அரங்கேறியது.
அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள்
சேலம் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப் பட்டு உள்ள சூழ்நிலையில் விசைத் தறி தொழிலாளர்களுக்கு அரசு உரிய அறிவிப்புகள் மற்றும் நிவாரணங் களை வழங்கவேண்டுமென விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப் பாக விசைத்தறி தொழில் செய்யும் அனைவருக்கும் முழுமையான நிவா ரணம் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு களை போக்க மத்திய, மாநில அர சுகள் உரிய இழப்பீடு வழங்க வேண் டும். நெசவாளர்களின் குழந்தைக ளுக்கு தற்போது வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை பகுதியை ஜவுளி உற்பத்தி மைய மாக அறிவிக்க வேண்டும். முதிர்வு பெற்ற நெசவாளர்களுக்கு 3000 உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் விசைத்தறி தொழிலுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலை இழப்பால் பாதிக்கப்பட் டுள்ள விசைத்தறி தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இருக்கும் சேலம் மாவட்ட விசைத்தறி தொழி லாளர்களை பாதுகாத்து வாழ்வா தார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள னர்.
-எழில், சேலம்.