கோவை, ஆக. 28 – பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியைக் கண்டித்து புலியகுளத்தில் மாதர் சங் கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூர் அருகே தனியார் மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்ற துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பெண் கள் குறித்து மிக மோசமாக பேசினார். இதற்குக் கண்டனம் தெரிவித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தமி ழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதி யாக புலியகுளம் பெரியார் சிலை முன்பு புத னன்று மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் யாகாவாராயினும் நாகாக்க வேண்டும், பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை நிறுத்தி கொள்,பெண்களை அவதூறாக பேசாதே என கண்டன முழக்கங் களை எழுப்பினர். முன்னதாக, இந்த ஆர்ப் பாட்டத்தில் கிழக்கு நகர தலைவர் வனஜா நடராஜன், செயலாளர் சுதா ராமர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.