கோவை, செப்.16- கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை மேற் கொண்டு வந்த குற்றவாளி, காவல்துறையின் கட்டுப் பாட்டில் இருந்து தப்பியோ டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆலாந்துறை பூளுவாம் பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம்முகாமில் ஞாயிறன்று தடை செய்யப்பட்ட 3 ஆம் நம்பர் லாட்டரி விற்பனை யில் ஈடுபட்டு வரும் சிவனே சன் என்பவருக்கும், பல் வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விஜயராஜ் (23) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட் டுள்ளது. இந்த மோதலில் இருவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதைய டுத்து ஆலாந்துறை காவல் துறையினர் விஜயராஜை கைது செய்தனர். பின்னர் காயமடைந்த விஜய ராஜுக்கு கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப் போடு சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் முதலு தவி சிகிச்சைகள் முடிந்து எக்ஸ்ரே எடுக்க செல்லும் பொழுது விஜயராஜ் காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடினார். அரசு மருத் துவமனையில் சிகிச்சையில் இருந்த குற்றவாளி காவல் துறையினரின் கட்டுப் பாட்டில் இருந்து தப்பியோ டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை யடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தர வின் பேரில் விஜயராஜை பிடிக்க தனிப்படை அமைக் கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்ற னர்.