தண்ணீர் பற்றாக்குறைய போக்க
பொள்ளாச்சி, நவ.8- பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூர் ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கக்கோரி கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத் துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வடசித்தூர் ஊராட்சி. இக்கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக் குறையால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். இதே போல், சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டுமென கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி மற்றும் வடசித்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் ஆகி யோர் தலைமையில் அப்பகுதியினர் கிணத்துக்கடவு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை பெற்றுக்கொண்ட அவர் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.