tamilnadu

img

பொங்குபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் இடஒதுக்கீட்டில் குழப்பம்: சிபிஎம் ஆட்சேபம்

திருப்பூர், நவ. 25 – திருப்பூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் களுக்கான இடஒதுக்கீட்டை விதி முறைப்படி பின்பற்றாமல் குழப் பம் ஏற்படுத்தி உள்ளதைக் களைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கு பாளையம் கிளைச் செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: பொங்குபாளையம் ஊராட்சி யில் ஆண் வாக்காளர்கள் அதிக முள்ள வார்டு பொது பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் அதிகமுள்ள வார்டு பொது என விதிமுறைக்கு முரணாக மாற்றப்பட்டுள்ளது.  இதன்படி 6ஆவது வார்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர் கள் அதிகமுள்ளனர். ஆனால் அது பொது வார்டு என அறிவிக்கப்பட் டுள்ளது. 2ஆவது வார்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள நிலையில் ஆதிதிராவிடர் பொது வார்டு என மாற்றப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள 7ஆவது வார்டும் பொது வார்டு என மாற்றப்பட்டுள்ளது. 2,6,7 வார்டுகளில் பெண் உறுப்பினர்க ளுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப் புள்ள இட ஒதுக்கீட்டில் ஒரு தலைப்பட்சமாக மாற்றப்பட்் டுள்ளது. 3, 8ஆவது வார்டுகளில் ஆண்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் இவற்றைப் பொது பெண் கள் வார்டு என அறிவித்துள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது. எனவே இதை மறுபரிசீலனை செய்து இந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்க ளுக்கான வார்டுகளில் இட ஒதுக் கீட்டை மாறுதல் செய்ய வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள் ளது.