tamilnadu

img

சட்டவிரோதமாக தண்ணீர் விற்பனை சிபிஎம்,சிபிஐ முற்றுகை போராட்டம்

உடுமலை, ஜூலை 2-  உடுமலை வட்டம், பெரியகோட்டை ஊராட்சியில் தனியார் நிலத்தில் இருந்து  சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து விற் பனை செய்வதை கண்டித்து சிபிஎம், சிபிஐ கட்சியினர் மேற்கொண்ட முற்றுகை போராட்டத்தால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.   தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் உடு மலை வட்டம், பெரிய கோட்டை ஊராட்சி யில் தனியார் கிணறுகளில் இருந்து சட்ட விதிகளுக்கு புறம்பாக லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து விற்பனை  செய்து வந்துள்ளார். இதனால் இப் பகுதியில் நிலத்தடி நீர் தொடர்ந்து கேள்விக் குறியாகி வந்தது. இதுகுறித்து பல முறை  அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப் பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைகண்டித்து செவ்வாயன்று தண்ணீர் விற்பனை செய்யும் இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அப்பாரு (எ) திருமலை சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செளந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த உடுமலை வட்டாட் சியர் தங்கவேல் தலைமையில் காவல் துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சட்டவிரோத தண்ணீர்  விற்பனை செய்யப்படுவதை தடை  செய்யவேண்டும். மேலும் தண்ணீர் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகளை பறிமுதல் செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதனால் முற்றுகை போராட்டம்  முடிவுக்கு வந்தது.