பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு கோவையின் குடிநீர் விநியோகத்தை தாரை வார்க்க முயற்சிக்கும் கோவை மாநக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் தொடர் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை சிங்காநல்லூர் நகரக் குழுவின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோ கரன், சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய் வேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கோவை குடிநீர் பறிபோகும் அபாயம் குறித்து மக்களிடம் விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட் டனர்.