tamilnadu

img

திருப்பூரில் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி

திருப்பூர், மே 12 –திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பயிற்சி அளிக்கப்பட்டது.சனியன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்சியாளர் வி.மாரிமுத்து விவிபாட் எனப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எண்ணுவது குறித்தும், வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்தும் அவற்றை 17 சி பகுதி இரண்டில் பதிவு செய்வதுகுறித்தும் பயிற்சி அளித்தார். அத்துடன் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் 23ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அங்கு வந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.இதில் உதவி ஆணையர்கள் எஸ்.சந்தான நாராயணன், மண்டல உதவி ஆணையர்கள் வாசுக்குமார், செல்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;