கோவை, அக்.8- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தொழில்நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொழில்நிறுவனங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடை பிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற் றது. அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. தொழில்நிறுவனங்கள் முகக்கவ சம் மற்றும் கையுறைகள் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அத னடிப்படையில், அனைத்து தொழில்நிறு வனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொழில்நிறுவனங்க ளில் பணிக்கு வரும் பணியாளர்களுக்கு தினந்தோறும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். பெரிய தொழிற்சாலைகளில் சற்று கூடுதலான தெர்மல் ஸ்கேனிங் கருவிகளையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை யும், தொழிலாளர்கள் வருகை பதிவேடு களை பயன்படுத்த வேண்டும். சளி, காய்ச் சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர் களை உடனடியாக தனிமைப்படுத்தி சுகா தாரத்துறைக்கு தகவல் தெரிவித்து, கொரோனா வைரஸ் பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். பிற மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் 7 முதல் 10 நாட்கள் தனி மைப்படுத்துதலுக்கு பின்னரே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவுறுத்தினார்.