கோவை, ஜூன் 10 - அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெர பிஸ்டுக்கு ஞாயிறன்று கொரோனா உறுதி செய்யப்பட் டதை அடுத்து அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள் ளது. கோவை அரசு மருத்துவமனையில் பிசியோதெர பிஸ்டாக 27 வயது இளைஞர் பணியாற்றி வந்தார். மருத்துவ விடுப்பில் விழுப்புரத்தில் உள்ள கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்று விட்டு,கோவை திரும்பியுள்ளார். ஒரு வார காலம் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த பின்னர் பணிக்கு திரும்பிய நிலையில், கோவை அரசு மருத்துவ மனையில் ஞாயிறன்று கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவர் வசித்த கோவை கனேசபும் அருகேயுள்ள போலீஸ் கந்தசாமி வீதியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட் டுள்ளது.அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள் ளன. வெளியாட்கள் அப்பகுதிக்குள் செல்லவும், அப்பகுதியில்உள்ளவர்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.