கோவை, ஜூலை 18- கொரோனா தொற்றால் வியாபாரி பலி யானதைத் தொடர்ந்து கோவை டி.கே மார்க்கெட் நான்கு நாட்களுக்கு மூடப்பட் டுள்ளது. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் 70 வயது முதியவர் இதயநோய் பிரச்சனை தொடர் பாக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அதேநேரம், இறந்த முதியவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது உடல் கோவை அரசு மருத்துவ மனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இப்பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து தியாகி குமரன் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்க கோவை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இப்பணிக்காக நான்கு நாட்களுக்கு மார்க்கெட் தற்காலிகமாக மூடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில, பொதுமக்களின் நலனை கருதி எடுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் தொடர்ந்து கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் மார்க்கெட் வியாபாரி கள் 500 பேருக்கு பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது, என தெரிவித்தனர்.