tamilnadu

img

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஏராளாமான மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி, பிப்.13- பொள்ளாச்சி நுகர்வோர் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சி நகரமன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு  கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி  நகரமன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நுகர்வோர் சங்கம் மற்றும் பொள்ளாச்சி  அரிமா சங்கம் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது.  இக்கருத்தரங்கத்திற்கு பள்ளியின் தலைமை  ஆசிரியர் எம்.கனகராஜ் தலைமை வகித் தார். முன்னதாக பள்ளியின் நுகர்வோர் மன்ற  ஒருங்கிணைப்பாளர் ஜி.லலிதா வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து பொள் ளாச்சி நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எஸ்.இந்திராணி மற்றும் சமத்தூர் நுகர் வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் யு.ஹாரூன்பாட்ஷா,பொள்ளாச்சி கிரான்ட்  அரிமா சங்கத்தின் செயலாளர் கே.கனகரா ஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நுகர்வோர் குறித்தும், உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும் நுகர்வோர் சங்கத்தினர் மாணவர்களிடையே உரை யாற்றினர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி யின் தமிழாசிரியர் எம்.ராணி நன்றி கூறி னார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளாமானோர் கலந்துக் கொண்டனர்.

;