tamilnadu

img

ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை: மின் விநியோகம் பாதிப்பு

ஏற்காடு, ஆக.9- ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால், பல்வேறு பகுதிகளில் மின்  விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளது.  சேலம் மாவட்டம், ஏற் காட்டில் கடந்த ஒரு வார காலமாக கடும் பணி மூட்டம் நிலவி வந்தது. மேலும் அவ்வப்பேது சாரல்  மழை பெய்து வந்த நிலை யில், வியாழனன்று முதல் லேசான சாரல் மழை பெய்து  வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள காப்பி எஸ்டேட் களில், மரங்கள் முறிந்து விழுகின்றன. அவற்றில் சில மரங்கள் மின் கம்பிகள் மீது விழுவதால், ஏற்காட்டில் பல்வேறு  கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள்  மின் பாதைகளை சரி செய்து மின் விநியோகத்தை வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இருந்தபோதிலும், ஏற் காட்டின் கிராம பகுதிகளுக்கு அதிகளவில் மின் விநியோகம் தடை ஏற்பட்டுள்ளது.  மேலும், லேசான சாரல் மழை பெய்வ தால், மண்ணின் இறுகு தன்மை குறைந் துள்ளது. இதனால் காவேரி பீக் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்து கிடந்தது. இதனால், காவேரிபீக் செல்லும் அரசு பேருந்து இயக்கப்படவில்லை.