கோவை நாடாளுமன்றத் தொகுதிஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜனுக்கு திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் துண்டணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னல் புத்தக நிலையப் பொறுப்பாளர் பா.சௌந்தரபாண்டியன் புத்தகம் பரிசளித்து வாழ்த்துத் தெரிவித்தார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.