சேலம், ஜூலை 12- 8 வழிச் சாலை திட்டம் தொடர் பாக தொடர்ந்து உண்மைக்கு புறம் பாக பேசி வரும் தமிழக முதல் வரைக் கண்டித்து சேலத்தில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவ சாயிகள் கருப்பு கொடி ஏந்தி கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழனன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம்- சென்னை வரை அமைக் கவுள்ள 8 வழி சாலை திட்டம் கட் டாயம் செயல்படுத்தப்படும். ஒரு சில அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களுக்காக இந்த எட்டு வழி சாலை திட்டத்தை தவறான திட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய தரைவழிப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து திட்டத்தை செயல்படுத் தக்கூடாது என்று மனுக்களை வழங்கியுள்ளனர். அதேநேரம், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் முக்கியம். ஆகவே, இந்த எட்டு வழி சாலை திட்டம் கட்டா யம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார் தமிழக முதல்வரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சேலம் பூலாவரி பகுதியில் 8 வழி சாலை திட்டத்தினால் பாதிக்கப் பட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கண்டன முழங்களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகை யில், விவசாய நிலங்களை அழித்து, பல்லாயிரக்கணக்கான மரங்களை அழித்து போடப்படும் இந்த எட்டு வழி சாலை திட்டம் எங்க ளுக்கு வேண்டாம். மேலும், இத் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஒரு விவசாயியும் இந்தச் சாலைக்கு ஆதரவு தெரி விக்கவில்லை. ஆனால், ஒவ் வொரு பொதுக்கூட்டத்திலும் விவசாயிகளின் ஆதரவு உள்ளது என உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். எந்த ஒரு காலகட்டத் திலும், எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் எங்கள் விவசாய நிலத்தை சாலை அமைப்பதற்கு விடமாட்டோம். ஒரு பிடி மண் கூட தரமாட்டோம் என விவசாயிகள் ஆவேசமாகக் கூறினர்.