tamilnadu

img

தோழர் மாரிமுத்து காலமானார்

கோவை, ஜூன் 9 -  பிஎஸ்என்எல் ஊழியர் கள் மற்றும் ஒப்பந்த தொழி லாளர்களின் உரிமைக ளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி மாநில உதவி தலைவராக உயர்ந்தவர் தோழர் கே.மாரிமுத்து. இவர் உடல் ஆரோக்கி யமின்மை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் செவ்வாயன்று கோவை ஒண்டிபுதூர் அருகே உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனியில் உள்ள  அவரது இல்லத்தில் காலமானார். இவரது மகன் தியாகு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிங்கை நகரகுழு வின் பொருளாளராகவும், கட்சியின் இனையதளகுழுவின் செயல்பாட்டாளராக உள்ளார்.

இவரது இளைய மகன்  குணா வாலிபர் சங்கத்தின் சிங்கை நகரக்குழு உறுப்பி னராக உள்ளார். தோழர் கே.மாரிமுத்துவின்   மறைவு செய்தி யறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநா பன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொது செயலா ளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இவரது இல்லத் திற்கு சென்று தோழரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

;