செங்கொடியை உயர்த்திப் பிடித்து அவர் விட்டுச்சென்ற பணியை முன்னெடுத்துச் செல்வோம்
தோழர். பி.தர்மலிங்கம் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையத் தில் 1936ம் வருடம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். பிறந்த ஓன்றரை ஆண்டுகளிலேயே தாய், தந்தையை இழந்த அவர், தனது அத்தைகள் பரா மரிப்பில் வளர்ந்தார். பெத்தநாயக்கன் பாளையம் உயர் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். தனது 17ஆம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு ஏற்பட்டு இயக்கங்களில் பங் கேற்க துவங்கினார். கம்யூனிஸ்ட் கட் சிக்கு செல்வாக்கான பகுதியாக அன்று பெத்தநாயக்கன்பாளையம் இருந்து வந்தது. அங்கு தனது இளைமைக் காலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற இளைஞர் அமைப்பில் செயலா ளராக இருந்து செயல்பட்டு உள்ளார். துவக்கத்தில் பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு வங்கியில் பணியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டே, கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்தார்.
1953ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெத்தநாயக்கன்பாளையம் கிளை யில் பொறுப்பேற்று செயல்பட ஆரம் பித்தார். சேலம் மாவட்ட கட்சி பணிக்கு வந்த தோழர். எம்.ஆர்.வெங்கட்டராமன் போன்ற தலைவர்களின் வழிகாட்டல் படி கூட்டுறவு பணியை விட்டுவிட்டு முழுநேர கட்சி பணியாற்ற துவங்கினார். 1964க்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யில் தன்னை முழு மையாக இணைத்துக் கொண்டு பணி யாற்றினார். ஒடுக்கப்பட்ட தலித் மக் களை அணி திரட்டி அவர்களின் வாழ் வாதாரத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். 1969முதல் ஆத்தூர் ராம நாயக்கன்பாளையம், திப்ப சமுத்திரம், கல்பகனூர், நொய்யமலை பகுதியில் நிலப்பிரபுக்களின் ஒடுக்குமுறையை எதிர்த்து போராடி நூற்றுக்கணக்கான ஏக்கர் தரிசு நிலத்தை ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு பெற்றுத் தந்ததில் முன்னணி வகித்தார். அப்ப சமுத்திரம் வன நிலங்களை கர் ணம், ரெவின்யூ அதிகாரிகள் துணை யோடு ஆக்கிரமித்திருந்த ஆதிக்க சக்தி களுக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட தலித் மக்களை திரட்டி, போராடி சுமார் 150 ஏக்கர் தரிசு நிலங்களை நில மில்லா ஏழை மக்களுக்கு விநியோகிக் கப்பட்டது. கல்பகனூர் பகுதியில் 100 ஏக்கர், தும்பல், மாமாஞ்சி, நெய்யமலை எடையப்பட்டி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் தரிசு நிலத்தில் இறங்கி வீரமிக்க போராட்டத்தை நடத்தி நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு உரிமையாக்கித் தரு வதில் முன்னணித் தலைவராக விளங் கினார்.
இந்த வீரம் செறிந்த போராட் டங்களில் அந்தப்பகுதி கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களோடு இணைந்து தோழர். றி.தர்மலிங்கம் தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தினார். இன்றும் அந்தப்பகுதியில் ஏ.கே.கோபாலன் நகர், ராமமூர்த்தி நகர், செங் கொடிக்காடு என்கிற பெயரில் போராட் டத்தின் அடையாளமாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக தோழர். பி.தர்மலிங்கம் 1970ல் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் செயல்மிக்க தலை வராக ஏழை தலித் மக்களின் நம்பிக் கைக்குரிய தலைவரானார். அன்றைய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளடக்கிய ஒன்றுபட்ட சேலம் மாவட் டத்தின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராகவும் செயல் பட்டார். 1975ல் நாடு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, கட்சி வழிகாட்டல்படி கைதாகாமல் தலை மறைவாக இருந்து கட்சி ஸ்தாபன பணிகளை தீவிரப்படுத்தும் பெரும் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட் டார்.1978ல் தமிழ்நாடு விவசாயி சங் கத்தின் தமிழ் மாநில மாநாட்டை சேலம் மாவட்டம் ஆத்தூரில் மிக சிறப் பாக முன்னின்று நடத்தினார். விவசாய, விவசாய தொழிலாளர்களின் நம்பிக் கைக்குரிய தலைவராக தோழர் பி.தர் மலிங்கம் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த தோழர் கே.எஸ்.அர்த்தனாரி உடல் நலம் பாதிக்கப்பட்டதையொட்டி, 1984 ஆம் ஆண்டு மாவட்ட பொறுப்பு செய லாளராக தோழர் பி.தர்மலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். 1985ல் நடந்த கட்சி யின் மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செய லாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பி.தர்மலிங்கம் 1999வரை 14ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராகவும், 15ஆண்டுகாலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந் தார். விவசாய அரங்கத்தில் முத்திரை பதித்த தோழர் பி.தர்மலிங்கம், கட்சி பொறுப்பேற்ற பிறகு சேலம் மாக் னசைட், இரும்பாலை, மேட்டூர் கெம்ப்லாஸ்ட், பியர்ட்செல், மால்கோ, பள்ளிப்பாளையம் பேப்பர் மில், சங்க கிரி சிமெண்ட் ஆலை என மிகப் பெரிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்க ளின் உரிமைகளுக்கான போராட்டத் திற்கு பெரிதும் துணை நின்று வழிகாட் டினார்.
விசைத்தறி, கைத்தறி மற்றும் முறை சாரா தொழிலாளர்களை அணி திரட்டு வதிலும், முத்தாய்ப்பாக விளங்கினார். குறிப்பாக பள்ளிப்பாளையம், குமார பாளையம் விசைத்தறி தொழிலாளர் களின் வீரம் செறிந்த கூலி உயர்வு போராட்டத்தில் தோழர் பி.தர்மலிங்கம் அவர்களின் பங்கு அளப்பரியது. மாதர், வாலிபர், மாணவர், மத்திய தர அங்கங் களில் ஸ்தாபன பணிகளை முன்னெ டுத்து செல்வதில் தோழர் பி.தர்மலிங் கத்தின் ஆலோசனை வழிகாட்டலே ஸ்தாபனத்தை விரிவுபடுத்த உதவியது. தோழர் பி.தர்மலிங்கம் சிபிஎம் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருக்கும்போது சேலம் சிறைத் தியாகி கள் நினைவகம் (கட்சி மாவட்டக்குழு அலுவலகம்) உருவாக்கப்பட்டு, அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எம்.கே.பாந்தே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இன்றும் தமிழக இடதுசாரி அரசியல் வரலாற்றில் சேலம் மாவட்டம் மிக சிறப் பான செங்கொடி தளமாக செயல்படு கிறது என்றால் அதில் தோழர் பி.தர்மலிங் கம் அவர்களின் உழைப்பும், தியாகமும் இரண்டற கலந்துள்ளது என்றால் மிகையல்ல. எந்தச் சூழ்நிலையிலும் நிதானமாக ஸ்தாபன பிரச்சனைகளை தீர்வு காண்பதில் தோழர் பி.தர்மலிங்கம் மிக திறமையானவர். ஒன்றுபட்ட மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழி யர்களை உருவாக்கியவர். சித்தாந்த ரீதியாக ஊழியர்களை பயிற்றுவிப்ப திலும், ஸ்தாபனத்தை விரிவுபடுத்து வதிலும் தோழரின் பங்கு அளப்பரி யது. தேசம் பாசிச மதவெறி சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் நெருக்கடி யான காலக்கட்டத்தில் தோழர் பி.தர் மலிங்கம் போன்ற உழைப்பாளி மக்கள் தலைவர்களின் இழப்பு இடதுசாரி இயக் கத்திற்கு பேரிழப்பாகும். தோழரின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சேலம் மாவட்டக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்து கிறது. தோழர் பி.தர்மலிங்கம் போன்ற தியாகத் தலைவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி, அவர் சென்ற பாதையில் செங் கொடியை உயர்த்திப் பிடித்து அவர் விட்டுச்சென்ற பணியை முன்னெ டுத்துச் செல்வதே ஆகும்.
பி.ராமமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர், சேலம் மாவட்டக்குழு.