tamilnadu

மாணவர்களின் திறனை வளர்க்க போட்டிகள்

சேலம், ஆக.23- மாணவர்களிடம் உள்ள பல்வேறு  திறமைகளை வளர்த்தெடுக்கும் பொருட்டு  ஹோலிகிராஸ் பள்ளியில் கலைவிழா கொண்டாடப்பட்டது.  இதில் மாணவர்களைக் கீழ் இளை யோர்,இளையோர், மூத்தோர் என்று  மூன்று பிரிவுகளாகப் பிரித்து பாட்டு, நடனம், பேச்சு, கட்டுரை, கவிதை, பொது அறிவு, மாறுவேடம், ஓவியம் உள்ளிட்ட 93  போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்க்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. அதிக போட்டிகளில்  வென்று எம்ரால்டு வேலி பள்ளி முதல் இடத்தையும், பள்ளி குளூனி மெட்ரிக் மேல்  நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவில் சிறப்பு  விருந்தினராக மாவட்ட துணை ஆட்சியர்   மெர்லின் ராணா, மாவட்ட காவல்துறை  துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர்  பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் சேலம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலாளர் அருண் கலந்து கொண்டு சிறப்பித்தார். பள்ளி முதல்வர் அருள் சகோதரர் சந்தோஷ், துணை முதல்வர்கள் அருள் சகோதரர் ஆன்டனிராஜ், திருட் எட்வர்ட் ஜோசப், நிர்வாக அலுவலர் அருள் சகோதரர் சேசு ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி மாண வர்களை பாராட்டினர்.