தாராபுரம், ஆக 3 - தாராபுரம் அருகே கல்லூரி மாண வியை கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், அவரின் பிரேதத்தை மீட்கும் பணியை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (60). டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் முத்தரசி (19). இவரின் தாயார் இறந்த நிலையில் 10 ஆம் வகுப்பு வரை 5 ஆண்டுகள் வேடசந்தூர் பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். பின்னர் தாராபுரம் ஆத்து கால்புதூரில் உள்ள பெரியம்மா வீட் டில் தங்கி ப்ளஸ் 2 வரை படித்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கன கராஜ் மகன் பரத் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது நவ மரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முத்தரசி படித்து வந்த நிலையில், பரத்துடன் நெருங்கி பழ குவதை அறிந்த முத்தரசியின் உறவி னர்கள் அதனை கண்டித்துள்ளனர். இதையடுத்து முத்தரசி தன்னை திரு மணம் செய்து கொள்ளுமாறு பரத் திடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜீன் மாதம் 5 ஆம் தேதி நல்லதங்காள் அணைப் பகுதிக்கு அழைத்து சென்ற பரத் தீடீரென முத்தரசியை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். இதன் பின் முத்தரசியின் பிரேதத்துடன் வீட்டுக்கு வந்த பரத், தனது தாயார் லட்சுமி (55) மற்றும் குமார் (28) ஆகி யோரின் துணையுடன் அருகே உள்ள தோட்டத்தில் முத்தரசின் உடலை புதைத்துள்ளார். இதைத்தொடர்ந்து பரத்திற்கு பெற்றோரின் ஏற்பாட்டின்பேரில் கடந்த மாதம் அவசர அவசரமாக வீராட்சிமங்கலத்தை சேர்ந்த குண சேகரன் மகள் வானதி (22) என்பவரு டன் திருமணம் செய்து வைத்துள்ள னர். ஆத்துக்கால் புதூரில் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்த வானதி வீட்டு தோட்டத்திலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதாக குடும்பத்தாரிடம் தெரி வித்துள்ளார். இதனால் கொலை செய்தது தெரிந்துவிடுமோ என அச்ச மடைந்த பரத் குடும்பத்தினர் பரத் மற்றும் வானதியை வீராட்சி மங்கலத்தில் உள்ள வானதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின் னர் முத்தரசியின் பிணத்தை வீட்டு தோட்டத்திலிருந்து தோண்டி எடுத்து கரையூர் அருகே பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்கை முத்தர சியை காணவில்லை என அவரின் சகோதரி தமிழரசி வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இத னைத் தொடர்ந்து கடந்த ஜீலை 31 ஆம் தேதி பரத்தை கைது செய்து நடத்திய விசாரணையில் முத்தரசியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இத னைத்தொடர்ந்து கொலைக்கு உடந் தையாக இருந்த பரத்தின் தாய் லட்சுமி, குமார் ஆகியோர் கைது செய்யப்பட் டுள்ளனர். மேலும், முத்தரசின் உடலை புதைத்ததாக கூறப்படும் வீட்டு தோட்டத்தில் அவரின் உடல் இருக் கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் அவ்விடத்தை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.