tamilnadu

கோவை: பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு - பேருந்து சேவையும் துவங்கியது

கோவை, செப்.1- கோவை வ.உ‌.சி பூங்கா, பந்தய சாலை பகுதிகளில் 5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவிலான நபர்கள் தனிநபர் இடைவெளியுடன் உடற் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங் கியுள்ளனர். இதேபோல் அரசு பேருந்து சேவையும் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத் தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டது. இதன் காரணமாக கோவை யில் உள்ள பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை மறு அறி விப்பு வரும் வரை மூட உத்தரவிடப் பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின் றன. அந்த வகையில் செவ்வாய் கிழமை முதல்  பூங்காக்கள், உடற் பயிற்சி செய்யும் இடங்கள் அரசு வழி காட்டும் நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள் ளது.  இதைத்தொடர்ந்து, கோவை வ‌.உ‌.சி பூங்கா,  பந்தய சாலை  உள்ளிட்ட இடங்களில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு குறைந்த அளவி லான நபர்கள் தனிமனித இடை வெளியுடன், முகக்கவசம் அணிந்து  நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற் சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ள னர்.

அரசு பேருந்து சேவை துவக்கம் இதேபோல், கோவையில் 50 சத விகித அரசு பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தேவைக்கு ஏற்ப பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அரசு வழிகாட்டு நடைமுறைகளின்படி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள், சானிடை சர்கள்  வழங்கப்பட்டுள்ளன. பேருந் துகளில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்ணிக்கையில் 60 சத வீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்படு கின்றனர். இருக்கை மற்றும் நிற்பதற் கான இடங்களில் பயணிகள் தனி நபர் இடைவெளியை உறுதி செய்ய வும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், முகக்கவசம் அணிந்தி ருந்தால் மட்டுமே பேருந்தில் பய ணிக்க பயணிகளை அனுமதிக்கவும், பயணிகளின் பயன்பாட்டுக்காக பேருந்தில் சானிடைசர் வைக்கவும் வழிகாட்டு நடைமுறைகள் வழங்கப் பட்டுள்ளது.

;