tamilnadu

img

பணிக்கு திரும்பினார் கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை, ஆக.10-  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி பூரண குணமடைந்து திங்களன்று பணிக்கு திரும்பினார்.  

கோவை மாவட்ட ஆட்சியரான கு.இராசமணிக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மை யில் வீடு திரும்பினார். இதையடுத்து பந்தய சாலை பகுதி யில் உள்ள முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டார்.

 இந்நிலையில் 26 நாட்களுக்கு பின் மீண்டும் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்து தனது பணிகளை துவங்கினார். இவருக்கு வருவாய் அலுவலர் ராமதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மற் றும் ஊழியர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

;