tamilnadu

கோவை, நாமக்கல் முக்கிய செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது 
கோவை, செப்.23- கோவை சிங்காநல்லூர் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட் களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமூக விரோதிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட காவல் எல்லைக் குட்பட்ட காவல்துறையும், கோவை மாநகர காவல் துறையும் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர் களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் படி சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சூர்யா நகரை சேர்ந்த சேட்டு என்ற ஐயப்பன் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதை யடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 
நாமக்கல், செப்.23- நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்  நலன் கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், எரி வாயு நுகர்வோர்கள் ஆகியோர்களுடன் “எரி வாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்” மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செப்.26 ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10  மணிக்கு நடைபெற உள்ளது.