tamilnadu

கோவை, ஈரோடு, திருப்பூர் முக்கிய செய்திகள்

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தகவல் 

கோவை, பிப்.13-  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தொழில்நெறி வழி காட்டும் கண்காட்சி  மற்றும் கருத்தரங்கம் வரும் பிப்.15 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளதாவது,கோவை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வரும் பிப்.15 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் நடை பெற உள்ளது. இதை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் இணைந்து நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி தேசிய தொழில் வேலைவாய்ப்புகள், நேர்முகத் தேர்வை  எதிர்கொள்ளும் வழிமுறைகள், சுயவேலை வாய்ப்பு கள், சுயவேலைவாய்ப்பு கடனுதவி, பாதுகாப்பு  படையில் வேலை வாய்ப்புகள் மற்றும் வெளி நாடுகளில் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான வழி முறைகள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திறன் பயிற்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு துறை வல்லுநர்கள் விளக்க உரை ஆற்றவுள்ளனர். மேலும், இதுகுறித்து விளக்கப்படங்கள், வரை படங்கள், புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடு திகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கஞ்சா விற்ற மூவர் கைது

ஈரோடு, பிப்.13- ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி குப்பம்பாளை யம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கொடுமுடி அரசம்பாளையம் காலனியை சேர்ந்த அஜீத்(27), சாலைப்புதூரைச் சேர்ந்த கார்த்தி(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோல் பங்களாபுதூர் போலீசார் நடத்திய ஆய்வில் தொப்பம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ்(37) என்பவர் கைது செய்யபட்டார். இவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இரவு நேர வண்டி கடைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பு

திருப்பூர், பிப்.13 – திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டு பூண்டி ரிங்  ரோடு செட்டிபாளையம் செல்லும் புதுப்பாலம் அருகே இரவு நேர வண்டி கடைகளுக்கு விஷமிகள் தீ வைத்தனர். திருமுருகன் பூண்டி முதல் பூலுவபட்டி செல்லும் ரிங் ரோட்டில் செட்டிபாளையம் புதுப் பாலம் அருகில்  இரவுநேர வண்டி கடை மற்றும் டிபன் கடைகள் செயல்பட்டு வந்தன. செட்டிபாளையம் பகுதியை  சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் இரவு டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் வியாழக் கிழமை அதிகாலை நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது, இந்த கடைகளுக்கு சமூக விரோதி கள் தீ வைத்துள்ளனர். இதில் டிபன் கடை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த கடையில் இருந்த அடுப்பு,  தோசை கல், புரோட்டா வீசும் மேஜை ஆகியவற் றையும் உடைத்து கீழே தள்ளிச் சென்றுள்ளனர். புதன்கிழமை இந்து முன்னணி பிரமுகரின் கார்  எரிக்கப்பட்டதைக் காரணமாகக்  கொண்டு நகரில் பேருந்துகள் மீது கல் வீச்சு, பேக்கரிகள் மீது கல்  வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் இந்து  முன்னணியினர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சி யாக செட்டிபாளையம் பாலம் பகுதியில் டிபன் கடைக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த விஷமிகள் தீ  வைத்திருக்கக்கூடும் என்று அப்பகுதியைச் சேர்ந்தோர் சந்தேகம் எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து வேலம்பாளையம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

திருப்பூர், பிப்.13 - திருப்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளியை போக்சோ சட்டத் தில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கலாதரன் (39). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ள னர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூர் வந்த கலாதரன் பூலுவப்பட்டி பகுதியில் தங்கி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை  செய்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கலாதரனின் மனைவி குழந்தையுடன் சில மாதங்களுக்கு முன் கேரளாவுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கலாதரன் 17 வயது சிறுமி ஒருவருடன் பழகி இருக்கிறார். அவரைத் திரும ணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை வெளி யூருக்கு கடத்திச் சென்றுள்ளார்.  சிறுமியின் பெற் றோர் கலாதரன் மீது மகளைக் கடத்திச் சென்றதாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசா ரணை நடத்தி புதன்கிழமை கலாதரனை கண்டுபிடித் தனர். அவர் கடத்திச் சென்ற சிறுமியை மீட்டனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் கலாதரன் சிறு மியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்து கலாதரனை கைது செய்தனர்.