tamilnadu

img

சாலையின் நடுவே மரக்கன்றுகள் நட்டு பொதுமக்கள் போராட்டம்

மூடப்படாத குழியால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்

மேட்டுப்பாளையம், நவ. 18- மேட்டுப்பாளையத்தில் குண்டும், குழியு மாக பழுதடைந்து கிடக்கும் சாலையால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகப் புகார் தெரிவித்து, சாலையின் நடுவே உள்ள  குழியில் மரக்கன்றுகளை நட்டி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் நகரில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் அருகே, சுபிரமணியர் கோவில் வீதி சாலை பழுதடைந்து காணப்படுகிறது. அருகில் உள்ள காய்கறி சந்தைக்கு வரும் லாரிகள் மற்றும் பேருந்துகள் கடந்து செல்லும் இச்சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதால், இதனை சீரமைத்து தர நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் பல னில்லை என புகார் கூறப்படுகிறது. இத னால் சாலையின் நடுவே உள்ள குழிக ளில் மழைநீர் தேங்கி, இவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்லும் பலரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இப்பகுதியில் பயணிக்கவே இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதி காரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படாத சூழலில் ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் திங்க ளன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். மேலும், மழைநீர் தேங்கி நிற்கும் சாலையின் நடுவே உள்ள குழியில் வாழை மரக்கன்றுகளை நட்டு நூதன போராட்டம் நடத்தினர். மறியலின் போது,  மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வா கத்தை கண்டித்தும், உடனடியாக சேத மடைந்து காணப்படும் சாலையினை செப் பனிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.