tamilnadu

img

ஊத்துக்குளி பகுதியில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் மகாசபை கோரிக்கை

 திருப்பூர், மே 21 –திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும் வகையில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மகாசபை வலியுறுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மகாசபை செவ்வாயன்று பல்லகவுண்டம்பாளையம் தோழர் கே.ரமணி நினைவரங்கில் நடைபெற்றது. இம்மகாசபைக்கு தலைவர் ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.கண்ணையன் வரவேற்றார். இந்த மகாசபையைத் தொடங்கி வைத்து திருப்பூர் மாவட்ட சிஐடியு செயலாளர் கே.ரங்கராஜ் உரையாற்றினார். சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி வேலையறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் வி.காமராஜ் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார்.இதைத்தொடர்ந்து பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தொழிலாளர் குடும்பங்கள் பயனடைய இஎஸ்ஐ மருந்தகம் ஊத்துக்குளி பகுதியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இம்மகாசபையில் திருப்பூர் மாவட்ட சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவராக ஆர்.பழனிச்சாமி, செயலாளராக ஜெ.கந்தசாமி, பொருளாளராக வி.காமராஜ், துணைத் தலைவர்களாக கே.கண்ணையன், எஸ்.தேவராஜ், துணைச் செயலாளர்களாக ஆர்.சிவராஜ், எஸ்.கே.சந்திரமூர்த்தி ஆகியோர் உள்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் இன்ஜினியரிங் தொழிலாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் நிறைவுரை ஆற்றினார். இம்மகாசபையின் நிறைவாக எஸ்.கே.சந்திரமூர்த்தி நன்றி கூறினார்.