tamilnadu

img

இந்திய சுதந்திரத்தை பாதுகாப்போம் சிஐடியு கலை விழா பொதுக்கூட்டம்

சேலம், ஆக.16-  இந்திய சுதந்திரத்தை பாதுகாப்போம் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் கலை விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலத்தில் வியாழனன்று நடைபெற்றது.  இந்த கலை விழா மற்றும் பொதுக்கூட்டம் எஸ்.கொல்லப்பட்டி பகுதியில்  சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் நாட்டின் இறையாண்மைக்கு கேடுவிளைவிக்கும் மோடி அரசை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி  தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மோடி அரசை கண்டித்தும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.   சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில், சென்னை பாரதி கலைக்குழு சார்பில் கலை விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் கள் எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி, ஜவுளி சங்க செயலாளர் பி.ராம மூர்த்தி, சிஐடியு உதவி செயலாளர் ஏ.கோவிந்தன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.