நாமக்கல், அக்.11- நாமக்கல் அருகே உள்ள இராமபுரம்புதூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் வெள்ளியன்று மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், இராமபுரம்புதூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது ஆட்டோ பட்டறையில் பணி யாற்றிய ஒரு சிறுவர் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுவர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூல மாக குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். இக்கூட்டாய்வில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பி.விஜய், நாமக்கல் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு பி.சண்முகவடிவு, த.தமிழ்ச்செல்வி, சைல்டு லைன் மோகனசெல்வி, தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட இயக்குநர் அ.போ.அந்தோணி ஜெனிட மற்றும் திட்ட களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.