அவிநாசி, ஜூலை 12- அவிநாசி சாலையோ ரங்களில் மர்ம நபர்களால் ரசாயனக் கழிவுகளை கொட்டப்பட்டு வரு கின்றது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமென பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவிநாசி ஒன்றியம் போத்தம்பாளையம் பகுதி சாலையோரம் மற்றும் பல்வேறு இடங்களில் ரசா யனக் கழிவுகளை மூட்டை மூட்டைகளாக கட்டி வீசி சென்று உள்ளனர். இம் மூட்டைகளை சிலர் தீ வைத்த எரிக்கின்றனர். இதேபோல் வடுகபாளையம் புறவழிச் சாலையில் ரசாயனக் கழிவுகளை மூட்டைகளாக கட்டி வீசி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரசாயனக் கழிவுகளை மூட்டைகளாக கட்டி சாலையோரங்களில் கொட்டி உள்ளதை சமீபத்தில் நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தது. இதையறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து உடனடியாக அப்புறப்படுத்துவது என கூறிவிட்டு சென்றனர். ஆனால் மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் ரசாயனக் கழிவுகளை அகற்றப் படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசு கின்றது. இச்சாலையில் செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்துள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ரசாயனக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். ரசாயனக் கழிவுகளை கொட்டும் நபர் கண்டறிந்து மாவட்ட நிர்வாகம், அவி நாசி ஒன்றிய நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.