மேட்டுர், ஜூலை 1- மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மட்டும் செயல்படுவதாக மேட்டூ ரில் நடைபெற்ற சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டு பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்திய தொழிற்சங்க மையத் தின் சேலம் மாவட்ட 12வது மாநாடு பொதுக்கூட்டம் மேட்டூர் சதுரங்காடி பகுதியில் மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் சிறப்புரை யாற்றிய சங்கத்தின் மாநில துணை செயலாளர் வி.குமார் பேசுகை யில், மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார்கள் எனவும், இதனைத் தடுத்து நிறுத்த தொழி லாளர்களின் கோரிக்கைகளை வெல்ல, செறிவுமிக்க போராட்டங் களை நடத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மோடி அரசு கடந்த ஆட்சியில் தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி அமைத்து, கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது. மீண் டும் பொறுப்பேற்றுள்ள மோடி அரசாங்கம் இதே வேலையைத் தான் தொடர்ந்து செய்யும். எனவே நாம் செறிவுமிக்க போராட்டங் களை நடத்தி நமது கோரிக்கை களை வெற்றிபெற செய்ய வேண் டும். அதற்காக இனி வரும் காலங் களில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். தமிழகத்தில் மோடி அரசுக்கு ஆதரவாகத் தான் எடப்பாடி அரசும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை எடப்பாடி அரசு செய்ய மறுக்கிறது.
குறிப் பாக மருத்துவமனையில் கூட போதுமான அளவு மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. இதே போல ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற காலிப்பணியிடங்கள் உள்ளது. அரசின் தவறான தனியார்மய கொள்கையின் காரணமாக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத அளவிற்கு விலைவாசி உயர்வு உள்ளிட்ட இன்னல்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே,நமக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவித் தார். முன்னதாக பொதுக்கூட் டத்தில் மாநிலபொது பொருளா ளர் மாலதி சிட்டிபாபு, மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். கே தியா கராஜன், ஆர்.வெங்கடபதி, ஆர்.வைரமணி, மாவட்ட செயலா ளர் டி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ உள் ளிட்டோர் உரையாற்றினர். மேலும், புதுகை பூபாளம் குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் எண் ணற்றோர் பங்கேற்றனர்.