tamilnadu

சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்கு

தருமபுரி, ஜூன் 23- பாப்பாரப்பட்டியில் 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சேர்ந்த ரங்கசாமி மகன் ரமேஷ் (27) என்பவருக்கும் ப்ரோக்கர் ராமச்சந்திரன் என்பவரின் மூலம் பெங்களூரு அருகே மஞ்சுநாத்நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கட்டாய திரு மணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ரமேஷ் வீட் டருகே உள்ள பொதுமக்கள் பென்னாகரம் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் கட்டாயத் திருமணம் செய்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை, சிறுமியை திருமணம் செய்த ரமேஷ் மற்றும் ப்ரோக்கர் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையறிந்த 5 பேரும் தலைமறைவாகிவிட்ட நிலையில் பென்னாகரம் காவல்துறையினர் தலைமறைவான அந்த 5 பேரையும் தேடி வருகின்றனர்.

;