tamilnadu

சரக்கு லாரியில் தீ விபத்து

கோவை, ஜூலை 24- நீலகிரி மாவட்டம், உத கையிலிருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி யொன்று கோவை நோக்கி மலைச்சாலையில் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, மேட்டுப்பாளை யத்தின் அருகே வந்தபோது லாரியின் முன்பக்க என்ஜி னில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்த ஓட்டுநர் சாலையோரமாக லாரியை நிறுத்தி வாகனத் திலிருந்து தப்பினார். இத னைத்தொடர்ந்து தீ மளமள வென்று பெரிதாக எரிய துவங்கியது.  இதுகுறித்து தகவல றிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் னர் தீயை அணைத்தனர். இதில், லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் சேதமாகாமல் தப்பியது. 

;