பொள்ளாச்சி, ஜுன் 1- கோவை மாவட்டம், பொள்ளாச்சி கேரள எல்லையிலுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் கேரளமாநில இளைஞர் விபின்(21) சட்ட விரோதமாகதனது தோல் பையில் 1200 கிராம் கஞ்சா கடத்தி வந்ததுதெரியவந்தது. அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல்செய்த காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.