tamilnadu

img

சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்

திமுக ஆர்ப்பாட்டம் - கைது

 கோவை, ஜன. 29 –  சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக் கோரி, கோவையில் புதனன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாநகராட்சியின் குடிநீர் விநி யோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங் கப்பட்டதை கண்டித்து எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர். இதன் ஒரு பகுதியாக, சூயஸ் குடிநீர் உரிமையை ரத்து செய்யக்கோரியும் குடியி ருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிட கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு புதனன்று திமுகவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது மாநில அரசை கண் டித்தும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித் தும் கண்டன முழக்கங்களை எழுப்பி னர். சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதி முறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர் வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப் பதாகவும், குடிநீர் கட்டணம் உயர வாய்ப் புள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டவர்கள் தெரிவித்தனர். மேலும் வார்டு வாரியாக குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்  அமைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படு வதோடு, தொற்று நோய்கள் பரவும் என்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குப்பை அள்ள பணம் வசூல் செய்யப்படுவதாகவும் ஆனால், மாநகராட்சி நிர்வாகம் குப்பை  அகற்றுவது இல்லை என கூறிய நா.கார்த் திக், இத்திட்டங்களை கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படுமென தெரிவித்தார். மேலும்,  ஜனநாயக ரீதி யான போராட்டங்களுக்கும் கூட ஆளும் கட்சி நிர்ப்பந்தம் காரணமாக காவல்  துறையினர் அனுமதி மறுத்து வருகிறது.  இதே போக்கினை கடைபிடிக்கப்ப டுமானால் அவர்களுக்கு எதிராக போராட் டம் நடத்தப்படும் என்றார். இதையடுத்து  தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல் துறையினர் கைது செய்த னர்.

;