சென்னை, ஜூலை16- தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனே வழங்க கோரி தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து சென்னையில் செவ்வாயன்று மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்தின. பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தை வாழ்த்தி மூத்த தொழிற்சங்கத்தலை வரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவருமான பி.சம்பத் பேசுகையில், மத்திய அர சாங்கம் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்து வருகிறது. பொதுத் துறையான தொலைத்தொடர்புத் துறையை அம்பானி உள்ளிட்ட தனி யார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது, ஊதியம் நிலுவை வைப்பது, ஆட்குறைப்பு செய்வது, உரிய பராமரிப்பு இன்றி நிர்வாகச் சீர்கேடு ஏற்படுத்துவது உள்ளிட்ட ஊழியர் விரோதப் போக்கோடு நடந்துகொள்கிறது என்று சாடினார்.
அரசு செய்யும் காரியமா?
சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “மக்களின் நலன் சாராத அரசு என்ப தால் தான் எல்லாவற்றையும் தனி யார் மயமாக்கி வருகிறது. கோவை யில் சூயஸ் என்ற நிறுவனம் தண்ணீ ரை தனியார் சொத்தாக மாற்றி வருகிறது. ரயிலையும் தண்டவாள த்தையும் கூட மத்திய அரசு தனி யாருக்கு விட்டுவிடப்போகிறது. தொலைதொடர்புத்துறை தொழி லாளிக்கு 6 மாதம் சம்பளம் தராமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? ஒரு அரசுத்துறை செய்கிற காரியமா இது? தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. நிரந்தர தொழிலாளர்களை விட ஒப்பந்த தொழிலாளர்கள் பன்மடங்கு அதிகரித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் கடமை நம்மிடையே இருக் கிறது. பாஜகவின் ஆதரவு தொழிற் சங்கம் கூட அரசின் கொள்கைக்கு எதிராக போராட துணிந்துவருகிறது. ஆட்சிக்கு எதிராக ஒரு யுத்தப்பிர கடனம் செய்யாவிட்டால் மக்க ளை காப்பாற்ற முடியாது. இந்த கொள்கைக்கு எதிராக தொழிலா ளர்கள், தொழிற்சங்கங்கள் வலுவான போராட்டம் நடத்த வேண்டும்” என்றார்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.வினோத், பெபி பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தலைவர் சி.கே.நர சிம்மன், உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு அமைப்பாளர் பெர்லின் கனகராஜ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஒப்பந்த தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடாது, ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்கக்கூடாது, பிஎஸ் என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.